இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

  • வன்னியன்

    அன்புக்குரிய மக்களே

    தற்போதைய எமது போராட்டத்தின் படிநிலைகளை நீங்கள் எல்லோரும் ஓரளவு அறிவீர்கள்,எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே தனி நாடு தமிழீழம் என்ற உன்னத குறிக்கோளுக்காக இக்குறிக்கோள் எந்த காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாற்றமடையாது.எமது போராட்டம் ஆரம்பிக்கும் போது இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வரும் இழப்புக்கள் வரும் என்பதை எல்லோரும் அறிந்திருந்தோம்,எமது குறிக்கோளுக்காக முப்பது வருடமாக ஆயுதம் ஏந்தி போராடி 24500 மாவீரர்களையும் 75000 மக்களையும் இதுவரையும் இழந்துள்ளோம் அதைவிட பல பொருளாதார வளங்களையும் இழந்துள்ளோம் இவை எல்லாம் ஏதற்காக ? எமது உன்னதமான குறிக்கோளுக்காக இந்த முப்பது வருடகாலமும் பயணித்துவிட்டோம் இனிமேல் இந்த குறிக்கோளில் இருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை,நாம் நம்பிய பல நாடுகளும் எம்மோடு கடைசிவரை இருந்த பல துரோகிகளும் எமக்கு முதுகில் குத்திவிட்டார்கள் அவர்களை நாம் சரியாக அடையாளம் கண்டுள்ளோம்,அவர்களுக்கு எமது வரலாற்றில் மன்னிப்பே கிடையாது அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது வழங்கப்படும் இதிலும் எவ்வித மாற்றமும் இல்லை,அன்புக்குரிய மக்களே எமது போராட்டத்தோடு 30 வருடகாலம் பலவித தியாகங்களோடு பயணித்துள்ளீர்கள் நீங்களே எமது பலம்,உங்களுக்காகவே எமது போராட்டம்,இனிவரும் காலங்களில் எமது போராடும் வழிமுறைகள் மாற்றமடையலாம் ஆனால் எமது குறிக்கோள் என்பது எப்போதும் மாற்றமடையாது என்பதை அறுதியாக தெரிவித்துகொள்கின்றோம்,எமது விடுதலை தாகம் தமிழீழத்திலே மட்டும் தான் முற்றுப்பெறவேண்டும், ஆகவே மக்களே சோர்ந்துவிடாதீர்கள் கவலைப்படாதீர்கள் உள்ளத்தில் நெருப்போடு, உணர்வோடு நீங்கள் வாழும் நாட்டிலே எமது போராட்டத்துக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக போராடுங்கள்,நீங்கள் தற்போது உங்கள் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல சிக்கல்களையும் தாண்டி தமிழீழ மக்கள் என்ற உணர்வோடு ஓன்று[பட்டு போராடிவருகிறீர்கள் இதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ,நீங்கள் போராடியதற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது ஆனால் முழுமையடையவில்லை தற்போதும் உலக நாடுகள் சில ஒருவித மயக்கநிலையிலேயே இருக்கின்றன ஆகவே நீங்கள் எழுந்திருங்கள் துணிந்திருங்கள் விழித்திருங்கள் காத்திருங்கள் அவர்கள் மயக்கத்தை போக்கியிருங்கள்,சிங்களம் தற்போது பெற்றிருக்கும் அடைவு வெற்றியா தோல்வியா என்பதை அவர்களின் வாயால் சொல்வதை நீங்கள் இன்னும் சில நாட்களில் அறிவீர்கள்,நாம் நிலத்தை இழந்திருக்கிறோம் என்பது உண்மையே ஆனால் எம்மிடையே இருக்கும் தமிழீழம் என்ற உணர்வு மரணிக்கவில்லை மரணிக்கப்போவதுமில்லை,நாம் இனிமேல் முன்னெடுக்கப்போகும் போராட்டம் முன்னேப்போதுமில்லாமல் வித்தியாசமாகவும் போர் என்றால் என்ன என்று ஸ்ரீலங்கா கடை நிலை மக்கள்கூட அறிந்திருக்கக்கூடியதகவும் இருக்கும்,எம் தேசத்தில் எஞ்சியிருக்கும் எம் தேசத்து பிஞ்சுகள் கேட்கின்றன எஞ்சியிருக்கும் மரம் செடி கொடிகள் கேட்கின்றன செந்நீரினால் குளித்திருக்கும் எம் தேசத்து மண் கேட்கின்றது இதற்கு தமிழனின் பதில் என்னவென்று ? நிச்சயமாக சொல்கிறோம் இவற்றுக்கு எல்லாம் பதில் உண்டு எம்தேசத்து மக்களின் உயிர்களுக்கு விலை உண்டு எம் தேசத்து மரம் செடிகொடிகளுக்கு கூட விலை உண்டு இனிவரும் காலங்களில் உண்டு.காத்திருங்கள்.வாழ்வை கேட்ட தமிழனுக்கு இந்த உலகு தந்தது சாவு மட்டுமே,நாம் இதுவரை மனிதம் இல்லாத உலகில் மனிதர்களாக வாழ்ந்தோம் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.எம் தேசம் எங்கும் சதை துண்டுகளும் ரத்தமும் பிணங்களுமே சிதறிக்கிடக்கின்றது நாம் பொறுமையின் எல்லையிலும் நியாயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,எம் அன்புக்குரிய புலத்தில் வாழும் மக்களே உங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுங்கள்,நிச்சயம் தமிழீழம் கிடைக்கும்.

    அருளன்
    தமிழீழம்

0 கருத்துரைகள்:

Leave a Reply

d