இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

  • நாடு காப்போம்.

    சின்னச் சின்ன நினைவுகள் தாலாட்டும்,
    மனமே! என் மனமே! மயங்காதே!

    வண்ண வண்ண கனவுகள் காணும்!
    இனமே! என் தமிழினமே! தயங்காதே!

    வானம் எங்கும், கானம் பாடும்,
    மானம் காத்த, மாவீரர் நினைவும் சங்கீதமே!

    எண்ண எண்ண இதயம் தொட்டு,; எம்மை
    காண ஏங்கும் உறவுகள், துயரம் தினந்தினமே!

    தன்மான மன்னன் பண்டார வன்னியன்,
    ஆண்ட மாவீரம் எமது அல்லவர்?

    அந்நியர் எம் ஈழம் ஆள்வதும் தவறல்லவா?
    இன்னல் தரும் எதிரியை, விரட்டுவதும்,

    மண்தனில், தமிழர் இருக்கும் வரை,
    தன்னிலம் காப்பதும், தமிழர் உரிமையல்லவா!

    மன்னும் தமிழ், தாயகம் இன்னல் அகல,
    என்றும் இறுதி இலட்சிய தாகம் வெல்வோம்.

    
    காஞ்சனா
    ஜெர்மனி

0 கருத்துரைகள்:

Leave a Reply

d